Friday, February 11, 2011

நட்புக் கரை... காதல் அலை... கால் நனைக்கலாமா?

நட்புக் கரை... காதல் அலை... கால் நனைக்கலாமா?

செந்தில், ப்ரீத்தி, நாகப்பன்
படம் : விஜய்மணி

காதல்! கண்களுக்கு அகப்படாத அணு வாகவும், கண்களுக்குள் அடங்காத ஆகாய மாகவும் இருப்பது. காதலில் காமம்... சரி. ஆனால், நட்பில் காதல்..? வரையறைகள், வித்தியாசங்கள், விகிதாசாரங்கள் தாண்டி விவாதிக்கிறார்கள் நட்பில் காதலைக் கண்டோர்.

இரும்பிலே ஒரு இருதயம் செய்தாலும், அதில் காதலை ஊற்றெடுக்கச் செய்யும் காதல் மொழி படைக்கும் பாடலாசிரியை தாமரை, தன் நட்பு, காதல் பரிணாமம் அடைந்த கதை சொல்கிறார். ''நண்பர்கள் காதலர்களாக மாறுவது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், பார்த்தவுடன் காதல், ஏற்பாட்டுத் திருமணம் இரண்டுமே அபாயகரமானது. யார் என்றே தெரியாத ஒருவரைப் புரிந்துகொள்ளாமல் வாழ்வைக் கசப்பாக்கிக்கொள்வதைவிட, நம் கூடவே இருந்து, நம்மை நன்கு புரிந்து கொண்டவர்களை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்வது நம் வாழ்வைத் திருப்திகரமானதாக ஆக்கும். பெற்றோர்களால் நாள் நட்சத்திரம் பார்த்துச் செய்துவைக்கப்பட்டது என் முதல் மணவாழ்க்கை. ஆனால், இருவருக்கும் தனித்தனியே அவர்களின் வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. மனமுடைந்து போயிருந்த நேரத்தில், எனக்கும் தியாகுவுக்கும் இடையே நட்'பூ’ பூத்தது. இருவரின் அலை வரிசையும் ஒன்றாக இருக்கவே, வாழ்க்கை யிலும் நாம் ஏன் ஒன்றாக இணையக் கூடாது என்று முடிவெடுத்து, திருமண பந்தத்தில் இணைந்தோம். அதனால், நண்பர்கள் காதலர் களாவதை நான் மனப்பூர்வமாக ஆதரிக் கிறேன்!'' என்கிறார் தாமரை.

''ஃப்ரெண்ட்ஷிப் எப்போ காதலா மாறும்னு எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா, என் மனைவி ப்ரியா அழகா சொல்வாங்க. காரணம், நான் ப்ரியாவைப் பார்த்த நொடியிலேயே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்!'' என்று காதல் கலந்து பேசுகிறார் விமல்.

''திண்டுக்கல் கோயில் திருவிழாக்கள்ல ஆடியாடி நகர்ற சப்பர விளக்கு வெளிச்சத்துலயும், சவ்வு மிட்டாய் விக்கிறவரோட அரிக்கேன் லைட் வெளிச்சத்துலயும் திகட்டத் திகட்ட அவளை நான் காதலிச்சது எல்லாம் என் வாழ்க்கையின் திருவிழாக் காலங்கள். ஆனா, அவங்க என்னைப் பல வருஷமா ஃப்ரெண்ட் லிஸ்ட்லயே வெச்சிருந்து, ரொம்ப யோசனைக்குப் பிறகுதான் லவ்வர் போஸ்டிங் கொடுத்தாங்க.

'எப்போ என் காதலை ஏத்துக்கிட்டே?’னு கேட்டா, 'ஊர் திருவிழாக்கள்ல சந்திச்சப்ப எல்லாம் நல்ல ஃப்ரெண்டை பார்க்கிற சந்தோஷம் தான் வரும். பிரியுறப்ப அழுகை வரும்.ஆனா, அந்தக் கண்ணீர்ல அழுத்தம் இருக்காது. ஏன்னா, அடுத்த திருவிழாவுல நிச்சயம் பார்ப் போம், விளையாடுவோம்னு தெரியும். ஒரு கட்டத்துக்குப் பிறகு, நீங்க காதலை வெளிப் படையா சொல்லிட்டீங்க. நான் எந்தப் பதிலும் சொல்லலை. அதன் பிறகு, நாம ஒவ்வொரு தடவை சந்திக்கிறப்பவும் உங்க கண்ணுல காதல் அதிகமா தென்படும். ஒவ்வொரு தடவை உங்களைச் சந்தித்துத் திரும்பும்போது எல்லாம் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். 'அடுத்து எப்போ உங்களைப் பார்க்கப்போறேன்’ங் கிற யோசனையே மனசுக்குள் ஓடிட்டே இருக் கும். அந்தத் தருணங்களில்தான் எனக்குள்ளும் ஒளிஞ்சிருந்த காதலை நான் உணர்ந்தேன். அது அன்பின் தேடல்’னு விஞ்ஞான விளக்கம் வரும் ப்ரியாகிட்ட இருந்து.

எங்க நட்பின் ஆரம்ப நிலையிலேயே எனக்கு ப்ரியா மேல காதல் இருந்திருக்கணும். அல்லது, காதல் வந்ததாலேயே வலியப் போயி நான் நட்புப் பாலம் அமைச்சிருக்கணும். எது எப்படியோ மனைவி, தோழி, அம்மா, மகள்னு அத்தனை உறவுகளாகவும் எனக்கு ப்ரியா இருக்காங்க!'' என்று நெகிழ்கிறார் விமல்.

''நண்பர்கள் எப்போது காதலர்களாக மாறுகிறார்கள்? அவர்கள் உங்கள் மீது தனித்துவ அன்பு செலுத்தும்போது... உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வரும்போது... அந்த கெமிஸ்ட்ரி மெல்லிய இசையைப் போல உயிர் ஊடுருவக் கூடியது!'' என்று காதல் கஜல்இசைக் கிறார் ஜி.வி.பிரகாஷ். குழந்தைப் பருவத் தோழி சைந்தவி இப்போது ஜி.வி.பிரகாஷின் காதலி.

''நண்பர்களாக இருந்து, காதலித்துத் திருமணம் முடிப்பவர்களுக்கு இருக்கும் ப்ளஸ், உங்கள் பார்ட்னரை நீங்கள் ஏமாற்றவே முடியாது. உங்களைப்பற்றி அவருக்கும், அவர் பற்றி உங்களுக்கும் ஆழமான புரிதல் இருக் கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, சமமான மதிப்பளித்து வாழும் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் உங்களுக்குள் இருக்கும் அன்பை ஊற்றெடுக்கச் செய்துகொண்டே இருக்கும். ஒரு ஃப்ரெண்ட்கிட்ட எப்படி நம்ம மனசுவிட்டு நம்ம பலம், பலவீனங்களைப் பகிர்ந்துகொள்வோமோ, அந்த அரவணைப்பும் ஆறுதலும் காதல் மனைவிகிட்ட இன்னும் அதிகமாகவே இருக்கும். என் முதல் விசிறியும், என் முதல் விமர்சகரும் சைந்தவிதான். தோழி, காதலி என்று எனக்கு எல்லாமுமாக இருக்கும் சைந்தவிக்கு, மேலும் மேலும் தீராத காதலைப் பரிசளித்துக்கொண்டே இருப்பதுதான் இனி என் வாழ்நாள் தவம்!'' என்று 'இசை’கிறார் ஜி.வி.

''கணேஷ்கருக்கும் எனக்கும் 20 ஆண்டு நட்பு. நாங்க கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகும், அந்த நட்பு தொடர்கிறது!'' என்று சிரித்துவிட்டுத் தொடர்கிறார் ஆர்த்தி. ''எனக்கு அப்போது மூணு வயசு இருக்கும். 'என் தங்கை கல்யாணி’ படத்தில் நான்தான் சின்ன வயசு கல்யாணி. கணேஷ் சின்ன வயசு டி.ஆர். அந்தப் படத்தைக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஷூட் பண்ணாங்க. அதனால நானும் கணேஷ§ம் அப்பவே ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்.

பிறகு, கல்லூரியில் படிக்கும் சமயம் 'சூப்பர் 10’ நிகழ்ச்சியிலும் நாங்க சேர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சி ஏழு ஆண்டுகள் எங்களை ஒண்ணாவே வெச்சிருந்தது. தொடர்ந்து 'மானாட மயிலாட’ என கலைஞர் டி.வி நிகழ்ச்சிகள். ரொம்ப நெருக்கமான நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா, நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்னு வரும் செய்திகளைப் பார்த்து ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. பிறகு பழகிருச்சு. ஷூட்டிங் யூனிட்டில் 'ஆர்த்தி கணேஷ்’னு ரெண்டு பேரையும் ஒண்ணாவே அழைப்பாங்க. என்னை எங்கேயாவது வெளியில் பார்க்கும் ரசிகர்கள், 'கணேஷ்கர் நல்லா இருக்காரா’ன்னு கேட்பாங்க. எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ கணேஷ் செய்த உதவிகளைக் காலத்துக்கும் மறக்க முடியாது. அப்போ எங்க அம்மாவே, 'மகன் மாதிரி பார்த்துக்கிட்டாரு. இவரே எனக்கு மருமகனா வந்தா எப்படி இருக்கும்’னு யோசிச்சாங்க. அப்பதான் எங்க நட்பு அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டிய தேவை எங்களுக்கும் புரிந்தது. காதலுக்கு மரியாதை செய்தோம்!'' என்று நட்புறவு இல்லறப் படகில் ஏறிய கதையை நினைவு கூர்கிறார் ஆர்த்தி.

'காதலிக்கப்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்பார்கள். பிறரை ஆசீர்வதித்து ஆசீர்வாதமும் பெற வாழ்த்துக்கள்!

நட்பு VS காதல்

ண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள். விரும்பியவர்களிடத்தில் மனம் சில விதிகளை மீற விரும்பும். எதிர்பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும். நட்புக்கும் காதலுக்கும் எது எல்லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்கவைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப்பற்றிச் சொல்கிறார், உளவியல் நிபுணர் செந்தில்வேலன்.

'' 'இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடு கள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று ஆண்-பெண் உறவைத் தெளிவாக வரை யறுக்க முடியாது. பலருக்கு நட்பும் காதலும் பாலும் நீரும் போலக் கலந்திருப்பதால் குழப்பத்திலேயே திளைப்பார்கள். ஓரளவுக்கு நெருங்கிப் பழகிய பிறகு தெரியாத நபரைவிட, தெரிந்த நபரே நல்லது என்று பெண்கள் உணர்கிறார்கள். நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்படை நான்கு காரணங்கள். முதல் காரணம், நெருக்கம். மிக அருகருகே இருப் பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும். இரண்டாவது காரணம்... நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது மூன்றாவது காரணம். உதாரணத் துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம். நான்காவதாக, இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள்.

பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.

ஆண் இன்னொரு ஆணுடன் பழகும்போது நட்புக்காகப் பணம், வேலை ஏன் உயிரையே கொடுக்கலாம். பெண் அதிகபட்சமாகத் தன்னையே கொடுக்க முடிவெடுப்பாள். வசதியான பெண், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்தில் பழகினால்கூட, 'உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்காளே. மச்சான், இது சத்தியமா காதல்தான்டா’ என்று அவனது நண்பர்களின் தூண்டுதலை அவனே நம்பத் தொடங்குவான். இது பெண்ணுக்குத் தெரிந்தால் அவளுக்குப் பேரதிர்ச்சிதான்மிஞ்சும்.

ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், 'ஸாரி... இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்’ என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை பையனின் எண்ணம் மாறாது.

ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டது களை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக் கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கை யான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு தொடரலாம்!'' என்று முடிக்கிறார் செந்தில்வேலன்.

ஆதலினால், நட்பின் கணவாய் வழியே காதல் தேசம் புகுதல் சரி/தவறு. உங்கள் தேர்வு எது என்பது உங்கள் கையில்!


Monday, November 22, 2010

தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி

மகசூல்
காசி.வேம்பையன்
தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி!

பளிச்... பளிச்...

ஏக்கருக்கு 1,000 மரங்கள்.
களைகளே கிடையாது.
`70,000 லாபம்.

முட்டுவளிச் செலவில் முடங்கிப் போய்க் கிடந்த பல விவசாயிகளை லாபப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் சென்று கொண்டிருப்பது 'ஜீரோ பட்ஜெட்' விவசாய முறைதான் என்பது சந்தேகமே இல்லாத உண்மை. இதை, உணர்ந்த தமிழக விவசாயிகள் பலரும் 'ஜீரோ பட்ஜெட்' முறையில் வெற்றிகரமாக பலவிதமானப் பயிர்களை சாகுபடி செய்து நிரூபித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான், திருச்சி மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தன்.

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைதான் பிரதானப் பயிர். காவிரி ஆறு, அதன் கிளை வாய்க்கால்கள் பாயும் பகுதியிலெல்லாம் நெல்லும், வாழையும்தான் இருக்கும். அதனால்தான் அந்தப் பகுதியை வாழை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

இதமானக் காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கோவிந்தனை சந்தித்தோம்.

திருப்பம் தந்த ஈரோடுப் பயிற்சி!

''நான் பத்தாவது முடிச்ச உடனேயே விவசாயத்துக்கு வந்துட்டேன். அப்போ சொந்தமா ஒரு ஏக்கர்தான் இருந்துச்சு. அதுபோக, குத்தகைக்கு அஞ்சு ஏக்கர் எடுத்து, அதுலதான் பதினஞ்சு வருஷமா விவசாயம் பண்ணிட்டுருக்கேன். எல்லாமே ஆத்துப் பாசனம்தான். மண்ணும் கரிசல் மண். அதனால தொடர்ந்து வாழை, நெல் ரெண்டையும்தான் மாத்தி மாத்தி சாகுபடி பண்றேன்.

உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்குமே ஏகப்பட்ட செலவு பண்ணி ஓய்ஞ்சு போனவங்கள்ல நானும் ஒருத்தன். Ôஇதுக்கெல்லாம் ஏதாவது மாற்றம் வராதா?Õனு தேடிக்கிட்டு இருந்தப்பதான், பசுமை விகடன் ஈரோட்டுல நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சியில கலந்துக்குறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. பயிற்சியில் பாலேக்கர் சொன்ன கருத்துக்கள் நல்லா மனசுல பதிஞ்சுடுச்சு. அப்பவே நமக்கு இந்த முறைதான் ஏத்ததுனு முடிவு பண்ணிட்டேன்.

செலவு குறைந்தது மகசூல் கூடியது

பயிற்சி முடிஞ்சு வந்ததுமே ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்... எல்லாத்தையும் தயார் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஒரு ஏக்கர்ல நவதானியத்தை விதைச்சு அதோட கற்பூரவல்லி வாழையை நடவு செஞ்சேன். தொடர்ந்து, ஜீவாமிர்தம் விட விட மண்ணுல ஏகப்பட்ட மண்புழுக்கள் பெருகிடுச்சு.

ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறுனதுக்கப்பறம் செலவு குறைஞ்சதோட விளைஞ்ச பழங்கள் நல்லா தரமாவும், அதிக சுவையாவும் இருந்தது. அதனால நல்ல விலை கிடைக்குது. முதல் போகத்துக்காக 20,000 ரூபாய்தான் செலவு பண்ணுனேன். 90,000 ரூபாய்க்கு காய் வெட்டினதுல 70,000 ரூபாய் லாபம். இந்தளவுக்கு லாபம் கிடைக்கும்னு நான் எதிர்பாக்கவேயில்லை.

இதுவே ரசாயன விவசாயமா இருந்தா, முதல் போகத்துக்கு 70,000 ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அந்த விலைக்கே போயிருந்தாக்கூட 20,000 ரூபாய்தான் லாபம் கிடைச்சுருக்கும். ரெண்டாம் போகத்துக்கு ஜீரோ பட்ஜெட் முறையில 7,000 ரூபாய்தான் செலவாச்சு. ஆனா, ரசாயனம்னா 30,000 ரூபாய் வரை செலவாகியிருக்கும்.

ரெண்டாம் போகத்துல காய் வெட்டுனப்போ இந்த ரகத்துக்குக் கொஞ்சம் விலை இறங்கி இருந்ததால 63,000 ரூபாய்தான் லாபம் கிடைச்சது. இப்போ மூணாம் போகம் அறுவடைக்குத் தயாரா இருக்கு. இதுல எப்படியும் 80,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.

நான் குத்தகைக்கு எடுத்துருக்குற நிலத்துல ஆரம்பத்துல இருந்தே ரசாயன விவசாயம்தான். அடுத்தவங்க நிலங்கிறதால அதுல சோதனையெல்லாம் பண்ணாம ரசாயன உரத்தை குறைச்சலாப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்.

அது எனக்கு தோதுப்படாதுங்கிறதால, பக்கத்துலயே சொந்தமா அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். அதுல ஆரம்பத்துல இருந்தே ஜீரோ பட்ஜெட் பண்ணலாம்னு நிலத்தைத் தயார்படுத்திக் கிட்டிருக்கேன்'' அனுபவப் பாடத்தை முடித்த கோவிந்தன், ஒரு ஏக்கருக்கான சாகுபடிப் பாடத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆறடி இடைவெளி!

''நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் கற்பூரவல்லி ரக வாழைக்கு ஏற்றது. இதற்கு கார்த்திகைப் பட்டம்தான் சிறந்தது. நிலம் தேர்வு செய்தவுடன், நிலத்தில் தண்ணீர் நிறுத்தி, குறுக்கு நெடுக்காக களை நீங்குமாறு நன்கு உழவு செய்து, சேறாக மாற்ற வேண்டும்.

ஏக்கருக்கு 25 கிலோ அளவுக்கு நவதானிய விதைகளைத் தூவி விதைக்க வேண்டும் (பார்க்க, பெட்டிச் செய்தி). பக்கத்துக்குப் பக்கம் ஆறடி, வரிசைக்கு வரிசை ஆறடி இடைவெளி இருக்குமாறு வாழைக்கட்டைகளை கிழங்குப் பகுதி மட்டும் சேற்றினுள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 1,200 வாழைக்கட்டைகளை நடவு செய்யலாம் (இவர் 1,000 வாழைக்கட்டைகளை நடவு செய்திருக்கிறார்) விதைக்கிழங்கானது... மூன்றுமாத வயதும், ஒன்றரைக் கிலோ எடையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூடாக்குக்காக நவதானிய விதைப்பு!

45-ம் நாளில் வாழைக்கட்டைகளில் இருந்து குருத்து முளைத்து விடும். 60-ம் நாளில் ஒவ்வொரு கட்டையிலிருந்தும் மூன்றடி இடைவெளி விட்டு ஒரு கன அடி அளவில் உரம் வைப்பதற்காக சிறு பள்ளம் தோண்ட வேண்டும்.

65-ம் நாளுக்கு பிறகு நவதானியங்கள் நன்கு முளைத்து வந்து பூ எடுக்கும். அப்போது நவதானியச் செடிகளைப் பறித்து, வாழைக்கு அருகில் உரத்துக்காக எடுத்திருக்கும் பள்ளங்களில் போட்டு நிரப்ப வேண்டும். மீதம் இருக்கும் செடிகளை நிலம் முழுவதும் பரவலாக மூடாக்காகப் போட வேண்டும்.

நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு பாசனம் செய்தாலே போதுமானது. 70-ம் நாளுக்கு மேல் ஒவ்வொரு முறை பாசனம் செய்யும் போதும், ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

பூச்சிக்கு, வேப்பிலை பயிருக்கு, தேங்காய்

90-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி தேங்காய் தண்ணீர் என்ற அளவில் கலந்து வாழை மீது மேல்தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் டேங்க் என்றால், ஏக்கருக்கு 20 டேங்குகள் பிடிக்கும். அதிலிருந்து அறுவடை வரை தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை இதேபோல தெளித்து வர வேண்டும். இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. 120-ம் நாளில் ஒவ்வொரு மரத்துக்கும் 100 கிராம் அளவுக்கு கனஜீவாமிர்தத்தை உரத்துக்கான பள்ளத்தில் வைக்க வேண்டும்.

பெரும்பாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் பூச்சிகள் வருவதில்லை. அப்படி ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், 10 கிலோ வேப்பிலை, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, 15 நாட்கள் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இக்கரைசலை டேங்குக்கு (10 லிட்டர்) 200 மில்லி வீதம் கலந்து தெளித்தால், பூச்சிகள் ஓடி விடும்.

களைகளே வராது!

மூடாக்கு போடுவதால் களைகள் வராது. சேற்று நடவு செய்வதால், மரத்துக்கு மண் அணைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. நட்ட எட்டு மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். அதன் பிறகு, குலைக்கு நேர் எதிர் திசையில் இருக்கும் கன்றுகளில் வாளிப்பானக் கன்றை மட்டும் பக்கக்கன்றாக விட்டுவிட்டு, மற்றவைகளைத் தோண்டி எடுத்து நிலம் முழுவதும் மூடாக்காகப் போட்டுவிட வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவைகளையும் மூடாக்காகப் போட வேண்டும்.

தாருக்கு 15 சீப்பு... சீப்புக்கு 20 காய்!

குலை தள்ளிய மூன்று மாதத்தில் அதாவது 11-ம் மாதத்துக்குப் பிறகு தார் அறுவடைக்கு வந்துவிடும். அதிகபட்சம் ஒரு வருடத்துக்குள் அறுவடை செய்து விடலாம். ஒரு ஏக்கரில் 1,000 வாழை மரங்கள் இருக்கும்பட்சத்தில் சேதங்கள் போக, குறைந்தபட்சம் 900 தார்கள் வரை அறுவடை செய்யலாம்.

ஒரு தாரில் 10 முதல் 15 சீப்புகளும், ஒரு சீப்புக்கு 15 முதல் 20 காய்களும் இருக்கும். தாரை மட்டும் வெட்டிவிட்டு தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு பக்கக்கன்று நன்றாக வளரும். தொடர்ந்து, பாசனத்துடன் ஜீவாமிர்தம்; தேங்காய்த் தண்ணீர் தெளிப்பு ஆகியவற்றை மட்டும் செய்து வந்தால், அடுத்த ஒன்பதாவது மாதத்தில் பக்கக்கன்றுகளில் இருந்து தார் வெட்டி விடலாம்.''

சாகுபடிப் பாடத்தை முடித்த கோவிந்தன் நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''கற்பூரவல்லி வாழைத்தார் குறைந்தபட்சம் 90 ரூபாய்க்கும், அதிகபட்சமா 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா தாருக்கு 100 ரூபாய் கிடைக்கும். ரசாயன முறையில் விளைவிச்சா அஞ்சு நாள் கூட பழம் தாங்காது. ஆனா, ஜீரோ பட்ஜெட் வாழை பத்து பதினஞ்சு நாள் வரைக்கும் அப்படியே இருக்குது. அதோட தேன் மாதிரி அபாரமான இனிப்பாவும் இருக்கு. நான் தனியா இயற்கைனு சொல்லி கூடுதல் விலைக்கெல்லாம் விக்குறதில்லை, வழக்கமான சந்தைக்குதான் அனுப்புறேன். இன்னும் கொஞ்சம் விற்பனைக்காக மெனக்கெட்டா கண்டிப்பா கூடுதல் லாபம் கிடைக்கும்” என்றார் எதார்த்த கணக்கோடு!

படங்கள்: 'ப்ரித்தி' கார்த்திக்.
தொடர்புக்கு, கோவிந்தன்,
அலைபேசி: 97866-89497

தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி

மகசூல்
காசி.வேம்பையன்
தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி!

பளிச்... பளிச்...

ஏக்கருக்கு 1,000 மரங்கள்.
களைகளே கிடையாது.
`70,000 லாபம்.

முட்டுவளிச் செலவில் முடங்கிப் போய்க் கிடந்த பல விவசாயிகளை லாபப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் சென்று கொண்டிருப்பது 'ஜீரோ பட்ஜெட்' விவசாய முறைதான் என்பது சந்தேகமே இல்லாத உண்மை. இதை, உணர்ந்த தமிழக விவசாயிகள் பலரும் 'ஜீரோ பட்ஜெட்' முறையில் வெற்றிகரமாக பலவிதமானப் பயிர்களை சாகுபடி செய்து நிரூபித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான், திருச்சி மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தன்.

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைதான் பிரதானப் பயிர். காவிரி ஆறு, அதன் கிளை வாய்க்கால்கள் பாயும் பகுதியிலெல்லாம் நெல்லும், வாழையும்தான் இருக்கும். அதனால்தான் அந்தப் பகுதியை வாழை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

இதமானக் காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கோவிந்தனை சந்தித்தோம்.

திருப்பம் தந்த ஈரோடுப் பயிற்சி!

''நான் பத்தாவது முடிச்ச உடனேயே விவசாயத்துக்கு வந்துட்டேன். அப்போ சொந்தமா ஒரு ஏக்கர்தான் இருந்துச்சு. அதுபோக, குத்தகைக்கு அஞ்சு ஏக்கர் எடுத்து, அதுலதான் பதினஞ்சு வருஷமா விவசாயம் பண்ணிட்டுருக்கேன். எல்லாமே ஆத்துப் பாசனம்தான். மண்ணும் கரிசல் மண். அதனால தொடர்ந்து வாழை, நெல் ரெண்டையும்தான் மாத்தி மாத்தி சாகுபடி பண்றேன்.

உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்குமே ஏகப்பட்ட செலவு பண்ணி ஓய்ஞ்சு போனவங்கள்ல நானும் ஒருத்தன். Ôஇதுக்கெல்லாம் ஏதாவது மாற்றம் வராதா?Õனு தேடிக்கிட்டு இருந்தப்பதான், பசுமை விகடன் ஈரோட்டுல நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சியில கலந்துக்குறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. பயிற்சியில் பாலேக்கர் சொன்ன கருத்துக்கள் நல்லா மனசுல பதிஞ்சுடுச்சு. அப்பவே நமக்கு இந்த முறைதான் ஏத்ததுனு முடிவு பண்ணிட்டேன்.

செலவு குறைந்தது மகசூல் கூடியது

பயிற்சி முடிஞ்சு வந்ததுமே ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்... எல்லாத்தையும் தயார் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஒரு ஏக்கர்ல நவதானியத்தை விதைச்சு அதோட கற்பூரவல்லி வாழையை நடவு செஞ்சேன். தொடர்ந்து, ஜீவாமிர்தம் விட விட மண்ணுல ஏகப்பட்ட மண்புழுக்கள் பெருகிடுச்சு.

ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறுனதுக்கப்பறம் செலவு குறைஞ்சதோட விளைஞ்ச பழங்கள் நல்லா தரமாவும், அதிக சுவையாவும் இருந்தது. அதனால நல்ல விலை கிடைக்குது. முதல் போகத்துக்காக 20,000 ரூபாய்தான் செலவு பண்ணுனேன். 90,000 ரூபாய்க்கு காய் வெட்டினதுல 70,000 ரூபாய் லாபம். இந்தளவுக்கு லாபம் கிடைக்கும்னு நான் எதிர்பாக்கவேயில்லை.

இதுவே ரசாயன விவசாயமா இருந்தா, முதல் போகத்துக்கு 70,000 ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அந்த விலைக்கே போயிருந்தாக்கூட 20,000 ரூபாய்தான் லாபம் கிடைச்சுருக்கும். ரெண்டாம் போகத்துக்கு ஜீரோ பட்ஜெட் முறையில 7,000 ரூபாய்தான் செலவாச்சு. ஆனா, ரசாயனம்னா 30,000 ரூபாய் வரை செலவாகியிருக்கும்.

ரெண்டாம் போகத்துல காய் வெட்டுனப்போ இந்த ரகத்துக்குக் கொஞ்சம் விலை இறங்கி இருந்ததால 63,000 ரூபாய்தான் லாபம் கிடைச்சது. இப்போ மூணாம் போகம் அறுவடைக்குத் தயாரா இருக்கு. இதுல எப்படியும் 80,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.

நான் குத்தகைக்கு எடுத்துருக்குற நிலத்துல ஆரம்பத்துல இருந்தே ரசாயன விவசாயம்தான். அடுத்தவங்க நிலங்கிறதால அதுல சோதனையெல்லாம் பண்ணாம ரசாயன உரத்தை குறைச்சலாப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்.

அது எனக்கு தோதுப்படாதுங்கிறதால, பக்கத்துலயே சொந்தமா அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். அதுல ஆரம்பத்துல இருந்தே ஜீரோ பட்ஜெட் பண்ணலாம்னு நிலத்தைத் தயார்படுத்திக் கிட்டிருக்கேன்'' அனுபவப் பாடத்தை முடித்த கோவிந்தன், ஒரு ஏக்கருக்கான சாகுபடிப் பாடத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆறடி இடைவெளி!

''நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் கற்பூரவல்லி ரக வாழைக்கு ஏற்றது. இதற்கு கார்த்திகைப் பட்டம்தான் சிறந்தது. நிலம் தேர்வு செய்தவுடன், நிலத்தில் தண்ணீர் நிறுத்தி, குறுக்கு நெடுக்காக களை நீங்குமாறு நன்கு உழவு செய்து, சேறாக மாற்ற வேண்டும்.

ஏக்கருக்கு 25 கிலோ அளவுக்கு நவதானிய விதைகளைத் தூவி விதைக்க வேண்டும் (பார்க்க, பெட்டிச் செய்தி). பக்கத்துக்குப் பக்கம் ஆறடி, வரிசைக்கு வரிசை ஆறடி இடைவெளி இருக்குமாறு வாழைக்கட்டைகளை கிழங்குப் பகுதி மட்டும் சேற்றினுள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 1,200 வாழைக்கட்டைகளை நடவு செய்யலாம் (இவர் 1,000 வாழைக்கட்டைகளை நடவு செய்திருக்கிறார்) விதைக்கிழங்கானது... மூன்றுமாத வயதும், ஒன்றரைக் கிலோ எடையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூடாக்குக்காக நவதானிய விதைப்பு!

45-ம் நாளில் வாழைக்கட்டைகளில் இருந்து குருத்து முளைத்து விடும். 60-ம் நாளில் ஒவ்வொரு கட்டையிலிருந்தும் மூன்றடி இடைவெளி விட்டு ஒரு கன அடி அளவில் உரம் வைப்பதற்காக சிறு பள்ளம் தோண்ட வேண்டும்.

65-ம் நாளுக்கு பிறகு நவதானியங்கள் நன்கு முளைத்து வந்து பூ எடுக்கும். அப்போது நவதானியச் செடிகளைப் பறித்து, வாழைக்கு அருகில் உரத்துக்காக எடுத்திருக்கும் பள்ளங்களில் போட்டு நிரப்ப வேண்டும். மீதம் இருக்கும் செடிகளை நிலம் முழுவதும் பரவலாக மூடாக்காகப் போட வேண்டும்.

நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு பாசனம் செய்தாலே போதுமானது. 70-ம் நாளுக்கு மேல் ஒவ்வொரு முறை பாசனம் செய்யும் போதும், ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

பூச்சிக்கு, வேப்பிலை பயிருக்கு, தேங்காய்

90-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி தேங்காய் தண்ணீர் என்ற அளவில் கலந்து வாழை மீது மேல்தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் டேங்க் என்றால், ஏக்கருக்கு 20 டேங்குகள் பிடிக்கும். அதிலிருந்து அறுவடை வரை தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை இதேபோல தெளித்து வர வேண்டும். இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. 120-ம் நாளில் ஒவ்வொரு மரத்துக்கும் 100 கிராம் அளவுக்கு கனஜீவாமிர்தத்தை உரத்துக்கான பள்ளத்தில் வைக்க வேண்டும்.

பெரும்பாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் பூச்சிகள் வருவதில்லை. அப்படி ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், 10 கிலோ வேப்பிலை, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, 15 நாட்கள் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இக்கரைசலை டேங்குக்கு (10 லிட்டர்) 200 மில்லி வீதம் கலந்து தெளித்தால், பூச்சிகள் ஓடி விடும்.

களைகளே வராது!

மூடாக்கு போடுவதால் களைகள் வராது. சேற்று நடவு செய்வதால், மரத்துக்கு மண் அணைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. நட்ட எட்டு மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். அதன் பிறகு, குலைக்கு நேர் எதிர் திசையில் இருக்கும் கன்றுகளில் வாளிப்பானக் கன்றை மட்டும் பக்கக்கன்றாக விட்டுவிட்டு, மற்றவைகளைத் தோண்டி எடுத்து நிலம் முழுவதும் மூடாக்காகப் போட்டுவிட வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவைகளையும் மூடாக்காகப் போட வேண்டும்.

தாருக்கு 15 சீப்பு... சீப்புக்கு 20 காய்!

குலை தள்ளிய மூன்று மாதத்தில் அதாவது 11-ம் மாதத்துக்குப் பிறகு தார் அறுவடைக்கு வந்துவிடும். அதிகபட்சம் ஒரு வருடத்துக்குள் அறுவடை செய்து விடலாம். ஒரு ஏக்கரில் 1,000 வாழை மரங்கள் இருக்கும்பட்சத்தில் சேதங்கள் போக, குறைந்தபட்சம் 900 தார்கள் வரை அறுவடை செய்யலாம்.

ஒரு தாரில் 10 முதல் 15 சீப்புகளும், ஒரு சீப்புக்கு 15 முதல் 20 காய்களும் இருக்கும். தாரை மட்டும் வெட்டிவிட்டு தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு பக்கக்கன்று நன்றாக வளரும். தொடர்ந்து, பாசனத்துடன் ஜீவாமிர்தம்; தேங்காய்த் தண்ணீர் தெளிப்பு ஆகியவற்றை மட்டும் செய்து வந்தால், அடுத்த ஒன்பதாவது மாதத்தில் பக்கக்கன்றுகளில் இருந்து தார் வெட்டி விடலாம்.''

சாகுபடிப் பாடத்தை முடித்த கோவிந்தன் நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''கற்பூரவல்லி வாழைத்தார் குறைந்தபட்சம் 90 ரூபாய்க்கும், அதிகபட்சமா 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா தாருக்கு 100 ரூபாய் கிடைக்கும். ரசாயன முறையில் விளைவிச்சா அஞ்சு நாள் கூட பழம் தாங்காது. ஆனா, ஜீரோ பட்ஜெட் வாழை பத்து பதினஞ்சு நாள் வரைக்கும் அப்படியே இருக்குது. அதோட தேன் மாதிரி அபாரமான இனிப்பாவும் இருக்கு. நான் தனியா இயற்கைனு சொல்லி கூடுதல் விலைக்கெல்லாம் விக்குறதில்லை, வழக்கமான சந்தைக்குதான் அனுப்புறேன். இன்னும் கொஞ்சம் விற்பனைக்காக மெனக்கெட்டா கண்டிப்பா கூடுதல் லாபம் கிடைக்கும்” என்றார் எதார்த்த கணக்கோடு!

படங்கள்: 'ப்ரித்தி' கார்த்திக்.
தொடர்புக்கு, கோவிந்தன்,
அலைபேசி: 97866-89497

Saturday, October 23, 2010

செடியை மரமாக்கும் இயற்கைக் கூட்டணி..

இயற்கை
செடியை மரமாக்கும் இயற்கைக் கூட்டணி...

மாபெரும் வேளாண்மைச் சவால்' (The Great Agricultural Challenge)...

'பரத் மன்சாடா' என்ற எழுத்தாளர் 'பாஸ்கர் சாவே' என்ற புகழ் பெற்ற இயற்கை விவசாயியையும் அவரது 'கல்ப விருக்க்ஷு' என்னும் பல்லடுக்கு மரத் தோட்டத்தையும் மையமாக வைத்து எழுதிய புத்தகத்தின் பெயர்தான் இது.

அப்படி என்ன மகத்துவம்?

குஜராத் மாநிலத்தில் கடலுக்கு அருகில் 14 ஏக்கரில் அமைந்துள்ளது, கல்ப விருக்ஷா. தென்னை, சப்போட்டா, காய்கறிகள், நெல்... என அனைத்துமே இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது.

எல்லாமே அபரிமிதமான விளைச்சல் தருவதுதான் இப்பண்ணையின் மகத்துவம். உதாரணத்துக்கு இங்குள்ள தென்னை மரங்கள் ஆண்டுக்கு 400 காய்கள் வரை கொடுக்கின்றன. ஒரு சப்போட்டா மரத்தில் ஆண்டுக்கு 300 கிலோ வரை பழங்கள் கிடைக்கின்றன. இந்தப் பண்ணைக்கு வந்திருந்த மசானாபு ஃபுகோக்கா, ''உலகம் முழுவதும் நான் பார்த்த பண்ணைகளில் இதுதான் உன்னதமானது. ஜப்பானில் உள்ள என்னுடைய பண்ணையைவிட சிறப்பாக இந்தப் பண்ணை அமைந்திருக்கிறது'' என்று பார்வையாளர் புத்தகத்தில் எழுதிச் சென்றிருக்கிறார்.

இத்தனைச் சிறப்பு வாய்ந்த பண்ணை உருவான கதைதான் 'மாபெரும் வேளாண்மைச் சவால்' புத்தகத்தின் கரு. இனி, அந்த நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்...

அனுபவம்தான் அறிவு

உழவர் குடும்பத்தில் பிறந்த பாஸ்கர் சாவே, மகாத்மா காந்தியின் தீவிர ரசிகர். பத்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி விட்டு விவசாயத்துக்குத் திரும்பிய இவரும் ஆரம்பக் காலங்களில் ரசாயன விவசாயத்தைத்தான் செய்து வந்தார். 'அனுபவத்தின் மூலம் பெறுவதே அறிவு' என்னும் மகாத்மா காந்தியின் பொன்மொழிக்கு ஏற்ப பண்ணையில் பாஸ்கர் சாவே செயல்படுத்திப் பார்த்த ஆராய்ச்சிகளின் விளைவுதான் கல்ப விருக்க்ஷு.

1960-ம் ஆண்டுக்கு முன்பே ரசாயன உரங்கள் மண்வளத்தை சிதைப்பதோடு, விவசாயத்துக்கான முட்டுவளிச்செலவைக் கூட்டுகின்றன என்று உணர்ந்தவர், பாஸ்கர் சாவே. 'ஒரு செடி மண்ணிலிருந்து எவ்வளவு சக்தியை எடுக்கிறது' என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டபோதுதான் இவருக்கு இன்னமும் இயற்கை மேல் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது.

மண்ணிலிருந்து எதையும் எடுப்பதில்லை பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்த ஜான் ஸ்டநூரர் என்ற மருத்துவர், தொட்டியில் வில்லோ செடி (ஐரோப்பாவைச் சேர்ந்த தாவரம்) ஒன்றை வளர்த்து வந்தார். செடியை ஊன்றுவதற்கு முன் தொட்டியிலுள்ள மண்ணை எடை போட்டு வைத்துக்கொண்டார் அவர்.

அதற்கு ஊற்றிய மழைநீரை மட்டுமே கொண்டு அந்தச் செடி ஐந்தாண்டுகளில் சிறிய மரமாக வளர்ந்தது. அந்த சமயத்தில் அந்த மரத்தைப் பெயர்த்து எடை பார்த்த போது 70.5 கிலோ அளவு எடை இருந்தது. தொட்டியில் இருந்த மண்ணின் எடை ஆரம்பத்தில் இருந்ததை விட அறுபது கிராம் மட்டுமே குறைந்திருந்தது.

மண்ணுக்கிடையில் பல்லாயிரக் கணக்கான நுண்ணிய வேர்களும் அடங்கி இருந்தன. இந்தச் சோதனை மூலம் ' மொட்டாக இருந்த குறுஞ்செடி 70.5 கிலோ எடையுள்ள மரமாக வளருவதற்குத் தேவையானப் பொருட்கள் தொட்டியில் இருந்து வரவில்லை. தொட்டிக்கு வெளியே இருந்துதான் கிடைத்திருக்கின்றன' என்ற முடிவுக்கு வந்தார், ஜான் ஸ்டநூரர். இவரின் சோதனையை மையமாக வைத்துக் கொண்டுதான் 1972-ம் ஆண்டு தன்னுடைய சோதனையைத் துவக்கினார், பாஸ்கர் சாவே.

காற்றும் நீரும் கொடுக்கும் உரம்...தனது மாடு படுக்கும் இடத்தில் உள்ள மண்ணை எடுத்து எடை போட்டுவிட்டு பின் ஒரு தொட்டியில் நிரப்பி, ஒரு வெள்ளரி விதையைத் ஊன்றித் தண்ணீர் விட்டு வளர்த்து வந்தார். அதில் முளைத்து வந்த கொடி 90 நாட்களில் 2 பழங்களைக் கொடுத்தது. ஒரு பழம்

5 கிலோ, இன்னொரு பழம் 3 கிலோ எடையும் இருந்தன. மீதமிருந்த இலை, சருகு, கொடி என அனைத்தும் சேர்ந்து

600 கிராம் எடை இருந்தன. மொத்த எடை 8 கிலோ 600 கிராம். ஆனால் மண்ணின் எடை கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அதே எடைதான் இருந்தது.

அதற்கு முன் செடி வளர்ச்சியைப் பற்றி கூறப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வு முடிவுகள், 'ஒரு செடி தன் எடையில் 94 சதவிகிதத்தைக் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும்தான் பெற்று வளர்கிறது (காற்றிலிருந்து 44 சதவிகிதம் ஆக்ஸிஜன் மற்றும் 44 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்ஸைடு, நீரிலிருந்து 6 சதவிகிதம் ஹைட்ரஜன்)' என்கின்றன. பாஸ்கர் சாவேயின் சோதனை முடிவும் இதை உறுதிப்படுத்தியது.

'சூரிய ஒளியை, ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் விளைபொருளாக மாற்றுவதற்கு நீர், நிலம், காற்று ஆகிய மூன்று பூதங்களும் சேர்ந்துதான் உதவுகின்றன. விளைச்சலை உறுதிப்படுத்துவதில், செடி, கொடி, மரங்கள், நுண்ணுயிர்கள், பூச்சி, புழுக்கள், விலங்குகள் ஆகியவை ஒரு சமூகமாக இணைந்து செயல்படுகின்றன' என்று ஆய்வுக்கு முடிவுரை எழுதினார், சாவே.

இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் ரசாயனத்தின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்க மாட்டார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கல்ப விருக்க்ஷு பற்றி விரிவாகப் பார்ப்போம்.

- போற்றுவோம்.

வனம் தரும் பணம்..!

திட்டம்
ஆர்.குமரேசன்
செடி,குழி,நடவு அனைத்தும் இலவசம்... வனம் தரும் பணம்..!

தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் ....

பளிச்... பளிச்...

ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை.
வேலையாட்கள் பிரச்னைக்குத் தீர்வு.
4-ம் ஆண்டு முதல் வருமானம்.

வானம் பாத்த பூமி, போக்குக் காட்டும் மழை, சரியில்லாத மண்கண்டம், பற்றாக்குறைத் தண்ணீர், வேலையாட்கள் பிரச்னை என்று பல பிரச்னைகளைப் பார்த்து, பயந்து போய் நிலங்களைத் தரிசாகப் போட்டு வைத்திருக்கும் அப்பாவி விவசாயியா நீங்கள்...? அல்லது 'இனிமே வெள்ளாமை செஞ்சி ஜெயிக்க முடியாது.. பேசாம நிலத்தை வந்த விலைக்கு வித்துட்டு வேற பொழப்பைப் பாக்கலாம்" என யோசிப்பவரா...? எப்படி இருந்தாலும் அவசரப்படாதீர்கள்... உங்களைப் போன்றவர்களுக்காகவே தமிழ்நாடு வனத்துறையின் வன விரிவாக்கப் பிரிவு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

'தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு' என்பதுதான் அந்தத் திட்டம். 'நாட்டில் 33 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அரசால் ஆரம்பிக்கப்பட்டத் திட்டமாக இருந்தாலும், அது பொதுநோக்கோடு குறிப்பாக விவசாயிகளுக்கும் பலன் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் விசேஷம். இனி இத்திட்டம் பற்றி விரிவாக விளக்குகிறார், மதுரை வன விரிவாக்க அலுவலர், ராஜசேகரன்.

விரும்பும் மரம் கிடைக்கும்

"இன்னிக்கு இருக்குற சூழல் கேடு எல்லாத்துக்கும் காடுகளை அழிச்சதுதான் காரணம். புவிவெப்பம், ஓசோன் ஓட்டைனு பிரச்னை பெருசானதும் உலக நாடுகள் முழுக்க மரங்களை வளக்கறதுல முனைப்பா இருக்கு. நம்ம நாட்டுலயும் காடுகளோட பரப்பை அதிகரிக்கறதுக்காக வனவிரிவாக்கத்துறை முனைப்பா செயல்பட்டு வருது.

காடுகள், மலைகள், தரிசு நிலங்கள்ல மரக்கன்றுகளை நட்டு வளத்துகிட்டு வர்றோம். ஆனா, காடுகளோட பரப்பு 33 சதவிகிதம் அளவுக்கு உயரணும்னா விவசாயிகள் மற்றும் பொதுமக்களோட பங்களிப்பு ரொம்ப அவசியம்ங்கிறதை உணர்ந்து, 'தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்ட'த்தை, 2007-ம் வருஷத்துல இருந்து அரசு செயல்படுத்திக்கிட்டு வருது.

இந்தத் திட்டத்தின்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் நிலத்துல நடுறதுக்குத் தேவையான மரக்கன்றுகளை இலவசமா கொடுக்குறோம். மரக்கன்று நட விரும்புற விவசாயிகளோட நிலங்களை எங்கள் அலுவலர்கள் ஆய்வு செஞ்சி, அந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளரும்னு பாத்து மண்ணுக்கேத்த மரக்கன்றுகளைக் கொடுக்குறோம். நாங்க பரிந்துரை பண்ற மரங்கள் மட்டும் இல்லாம விவசாயிகள் விரும்புற மரக்கன்றுகளையும் கேட்டு வாங்கிக்கலாம்.

அனைத்தும் இலவசம்

வெறுமனே மரத்தை நட்டு வளருங்கனு சொன்னா, 'மரம் நட்டா சூழல் சுத்தமாகும், நமக்கென்ன பயன்'னு யோசிக்குறாங்க. அதுனால அவங்களுக்கும் பலன் கிடைக்கணுங்கிறதுக்காக, வணிக ரீதியா பலன் கொடுக்குற மரங்களான, சவுக்கு, பெருமரம் (பீநாரி), குமிழ், மலைவேம்பு, மகோகனி, இலவம், தேக்கு, வாகை, வேம்பு, புங்கன், காயா, சிலவாகை, தடசு... மாதிரியான மரங்களைத்தான் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.

தேவைப்படுறவங்க நிலத்தை உழுது மட்டும் கொடுத்தா போதும். நாங்களே ஆட்களை அனுப்பி குழியெடுத்து மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்திடுவோம். இதுக்காக விவசாயிக எந்தப் பணமும் செலவழிக்கத் தேவையில்ல. நடவு செய்யுற செடியை நல்லபடியா பராமரிச்சுட்டு வந்தா, நடவிலிருந்து ஒரு வருஷம் கழிச்சு, ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத் தொகையும் கிடைக்கும்.

ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம்

பொதுவா மானாவாரி நிலம்னா அதுல இலவம், பெருமரம் நல்லா வளருது. கரிசல் மண் நிலமா இருந்தா, இலவ மரம் அருமையா வளரும். மழைக்காலத்துல நட்டு, செடியைச் சுத்தி குழி எடுத்து வெச்சுட்டா போதும்.

இறவைப் பாசனம்னா வரப்புப் பயிராக கூட மரங்களை நட்டுக்கலாம், அல்லது வரப்பைச் சுற்றி வேலிப்பயிரா சவுக்கை நட்டுட்டு வயலுக்குள்ள 15 அடி இடைவெளியில மரக்கன்றுகளை நட்டு இடையில விவசாயம் செய்யலாம். இப்படி மரக்கன்றுகளை நடும்போது முதல் ரெண்டு வருஷத்துக்கு ஊடுபயிரா காய்கறிகள், தானியங்கள்னு ஏதாவது ஒரு பயிர் செஞ்சி அது மூலமா வருமானம் எடுத்துக்க முடியும்.

வருஷா வருஷம் வருமானம்

3-ம் வருஷத்திலிருந்து இலவ மரத்துல காய்கள் கிடைக்கும். 4-ம் வருஷம் சவுக்கு, 5-ம் வருஷம் பெருமரம், 6-ம் வருஷம் குமிழ், 7-ம் வருஷம் மலைவேம்புனு தொடர்ந்து வருமானம் வந்துகிட்டே இருக்கும். 9-ம் வருஷத்தில இருந்து மூணு வருஷத்துக்கொரு தடவை பெருமரம் மறுதாம்பு மூலமா வருமானம் கொடுத்துக்கிட்டே இருக்கும். ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகளை நடவு செய்யலாம். 4 வருஷம் கழிச்சு வெட்டும்போது ஒரு சவுக்கு மரம் 25 ரூபாய்னு விலை போனா கூட ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கும்.

நாங்க கொடுக்குற மரங்களிலேயே கம்மியான விலைக்கு போறது சவுக்குதான். அதுலயே இவ்வளவு வருமானம்னா, மத்த மரங்கள் மூலமா கிடைக்கிற வருமானத்தை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.

வேம்பு, புங்கன் மாதிரியான மரங்களா இருந்தா மரங்கள் பெருசாவதற்குள்ள விதைகள் மூலமாவும் வருமானம் பாத்துடலாம். மரமும், விவசாயமும் சேர்ந்த வேளாண் காடுகளை அதிகமா ஏற்படுத்துறதுதான் இந்தத் திட்டத்தோட நோக்கம். பல பிரச்னைகளால விவசாயத்தை வெறுக்குற விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம்.

மரப்பயிரை சாகுபடி செய்யுறப்ப 20 ஏக்கர் நிலத்தைக் கூட ஒருத்தரே பராமரிச்சிட முடியும். உரம், பூச்சிக்கொல்லி, வேலையாள்னு எந்தச் செலவும் இல்லை. சுருக்கமாச் சொன்னா இதையும் 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்னே சொல்லலாம். மரம் வளக்குறதுல வருமானம் பாக்குறதோட சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்றோம்ங்கிற திருப்தியும் கிடைக்கும்" என்ற ராஜசேகரன் நிறைவாக,

"மரம் வளக்குற விவசாயிகளுக்கு, 'மரம் வளத்து, விக்குறதுக்காக வெட்டுறப்ப அனுமதி அது, இதுனு அலைய விட்டுடுவாங்களோ'னு ஒரு சந்தேகம் வரும். இது நியாயமான சந்தேகம்தான். மர வியாபாரிகள், தரகர்கள் இந்த விஷயத்தைக் காரணம் காட்டியே மரத்துக்கான விலையில் பாதியைக் குறைச்சுடுவாங்க.

அடையாள அட்டை

இதை தடுக்குறதுக்காக, தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டத்தின் மூலமா மரம் வளக்குறவங்களுக்கு புகைப்படம் ஒட்டுன அடையாள அட்டையை கொடுத்திடுறோம். அதுல அவங்களோட நிலத்தின் அளவு, மரங்களோட விவரம்னு எல்லாமே இருக்கும். அதை வெச்சே அவங்க கிராம நிர்வாக அலுவலகத்துல அடங்கல் குறிப்புல மரங்களோட விவரத்தைப் பதிவு செஞ்சுக்க முடியும். மரங்களை விற்பனை செய்றப்ப இந்த அட்டையை வனத்துறை அலுவலகத்துல காட்டி தேவையான ஆவணங்களைக் கொடுத்து கட்டணமா 10 ரூபாயை மட்டும் கட்டினாலே போதும். மரத்தை வெட்டி விற்பனை பண்றதுக்கான அனுமதி கிடைச்சுடும்" என்றார்.

இந்தத் திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக இந்தத் திட்டத்தின் மூலம் மரங்களை வளர்த்து வரும் விவசாயிகள் சிலரை சந்தித்தோம்.

மானாவாரியிலும் மகத்துவம்

திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு கிராமத்தில், 'மழையை விட்டால் வழியே இல்லை' என்ற அளவுக்கு வறண்டு கிடந்த கரிசல் காட்டில் இலவம் மற்றும் குமிழ் மரங்களை சாகுபடி செய்து வருகிற சுப்புராமைப் போய் பார்த்தோம். மனிதர் மிகவும் உற்சாகமாக, "பாசன வசதி இல்லாத நிலம். அதனால, மழையை மட்டும் நம்பி பருத்தி, சோளம்னு மாறி மாறி விதைப்பேன். ஆனாலும், விவசாயத்துல கைக்காசுதான் போச்சுதே தவிர, வருமானம்னு சல்லிக்காசு மிச்சமில்ல.

ஊருக்குப் பக்கத்துல இருக்கற 80 சென்ட் நிலத்துல இலவம் மரம் வெச்சிருந்தேன். அதுல விளையுற காயை எடுத்து, பஞ்சாக்கி வித்துத்தான் குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். அந்த நேரத்துல வனவிரிவாக்க மையம் மூலமா 'கன்னு கொடுக்குறோம்'னு சொன்னாங்க, நான் 'இலவங்கன்னு கொடுங்க'னு கேட்டு வாங்கி, அஞ்சு ஏக்கர்ல நட்டு மூணு வருஷமாச்சு. இதுவரைக்கும் மழைத் தண்ணியைத் தவிர வேறெந்த தண்ணியும் பாய்ச்சலை. இப்ப காய் காய்க்க ஆரம்பிச்சுடுச்சு.

இங்க எல்லா மரங்களும் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம் கரிசல் மண்தான். இந்த மண், மண்ணுல விழுவுற மழைத் தண்ணியை அப்படியே பிடிச்சு வெச்சுக்கும். அதனால நிலத்துல அங்கங்க உயரமான வரப்புகளைப் போட்டு, செடியை சுத்தியும் சைக்கிள் டயர் அளவுக்கு வட்டமா ஒரு அடி ஆழத்துல குழி எடுத்து வெச்சிட்டேன். இந்தக் குழியில ஒவ்வொரு தடவை மழை பெய்யுறப்பவும் 50 லிட்டர் தண்ணி நிக்கும். இப்படி கரை போட்டு, குழி எடுத்து வெச்சதால என் நிலத்துல விழுகுற மழைத் தண்ணி ஒரு பொட்டுக்கூட வெளிய போகாது.

6-வது வருஷத்துக்கு மேல இருந்து இலவு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். நல்லபடியா விளைஞ்சா ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா கிடைக்கும். இப்ப வாரத்துல ரெண்டு தடவை மட்டும் வந்து நிலத்தை ஒரு சுத்து சுத்திப்பாத்துட்டு போறதோட சரி. பருத்தி இருந்தப்ப ஆள் கிடைக்காம அவஸ்தைப்பட்ட நான், இன்னிக்கு என் நிலத்தையும் பாத்துக்கிட்டு அடுத்தவங்க கூப்பிட்டா வேலைக்கும் போறேன்.

என்னைப் பாத்துட்டு எங்க பகுதியில ஏகப்பட்ட பேரு மரம் வளக்குறதுல இறங்கிட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த வில்லங்கமும் இல்லாத விவசாயம் இந்த மரம் வளர்ப்புதான்" என்றார்.

5 ஏக்கர்...! 20 லட்சம்

அடுத்து நாம் சந்தித்தது, இறவையில் பெருமரம் (பீநாரி) வளர்த்து வரும் திண்டுக்கல், வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தத்தை. "இந்த மரத்தை நட்டு 11 மாசம் ஆகுது. இது மானாவாரியிலயே நல்லா வளரும், நான் அப்பப்ப தண்ணியும் கொடுக்குறதால குறுகிய காலத்துலயே நல்லா வளந்திருக்கு. 5 ஏக்கர்ல கிட்டத்தட்ட

2 ஆயிரம் மரங்க இருக்கு. இதே மாதிரி வளந்தா 4 வருஷத்துல வெட்டலாம்.

ஒரு மரம் 1,000 ரூபாயினு வெச்சுக்கிட்டாக்கூட 20 லட்ச ரூபா வருமானம் கிடைக்கும். அடுத்த மூணு வருஷத்துக்கு ஒருதடவை மறுதாம்பு மூலமா இதே தொகை தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும். வேறெந்த விவசாயத்துலயும் கிடைக்காத வருமானம் மரம் வளர்ப்புல கிடைக்கிறதோட, சமுதாயத்துக்கு நல்லது செஞ்சோம்ங்கிற திருப்தியும் கிடைக்குது" என்கிறார் முருகானந்தம்.

10 வருடம்... 40 லட்சம்..!

மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான சுப்பாராஜ், "45 வருஷமா விவசாயம் பாத்து, நொந்து நூலாகி இனிமே விவசாயமே வேண்டாம்னு முடிவுக்கு வந்து நிலத்தைத் தரிசாப் போட்டுட்டேன். அப்பதான் இந்தத் திட்டத்தில இருந்து வந்த வனவிரிவாக்க மைய அலுவலர்கள், 'இந்த மண்ணுல தேக்கு நல்லா வளரும்'னு சொல்லி தேக்கு மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்தாங்க. நானும் ஆரம்பத்துல இஷ்டம் இல்லாமதான் வாங்கி நட்டேன். ஆனா, மரம் வளர, வளர என்னையும் அறியாம எதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுப் போச்சு.

விவசாயமே வேணாம்னு ஓடுனவன், இப்ப தினமும் காலையில ஆறு மணியில இருந்து எட்டு மணி வரைக்கும் தோட்டதுலதான் இருக்கேன். ஒவ்வொரு மரமா பாத்து, நுனியக் கிள்ளி தடவிக் கொடுப்பேன். இங்க இருக்க ஒவ்வொரு மரமும் என்னோட பேசும். அஞ்சு ஏக்கர்ல தேக்கு இருக்கு. நட்டு 11 மாசத்துலயே 15 அடி உயரம், 22 செ.மீ சுற்றளவுக்கு தடிமனா பருத்திருக்கு.

10 வருஷத்துக்கு முன்ன இதைச் செஞ்சிருந்தா, இன்னிக்கு நான் கோடீஸ்வரனா இருந்திருப்பேன். கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இருந்தாலும் பரவாயில்லை இந்த அஞ்சி ஏக்கர்ல 2,000 தேக்கு இருக்கு. அடுத்த 10 வருஷத்துல ஒரு மரம் 2,000 ஆயிரம் ரூபாய்க்கு வித்தாலும், 40 லட்ச ரூபா கிடைக்குமே. எந்த வெள்ளாமையில இவ்வளவு வருமானம் கிடைக்கும்" என்றார் ஆனந்தமாக.

ஊடுபயிர்களும் பயிரிடலாம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த ராஜீ, "நான் இந்தத் தோட்டத்துல தண்ணி கட்டிப் பராமரிக்குற வேலை பாத்துக்கிட்டிருக்கேன். (இவர் தோட்ட உரிமையாளர் கிடையாது) தண்ணி வசதி இருக்குறதால இந்த நிலத்துல காய்கறிதான் போடுவோம். போன வருஷம் நவம்பர் மாசத்துல பீநாரியும், குமிழ்ச் செடியும் கொடுத்தாங்க. அதை 15 அடி இடைவெளியில நட்டு, வரப்பு முழுக்க சுத்தி சவுக்கு நட்டுருக்கோம். இடையில பாத்தி எடுத்து தக்காளியை நட்டு, வாய்க்காலோட ரெண்டு பக்கமும் துவரையையும் அகத்தியையும் நட்டுருக்கோம். அகத்தி, மாடுகளுக்கு தீவனமாப் பயன்படுது. தக்காளிக்குப் பாயுற தண்ணியிலயே மரங்க நல்லா உருண்டு திரண்டு வருது. 11 மாசத்துலயே பீநாரி 30 செ.மீ பருமனுக்கு பருத்திருக்கு. அடுத்த வருஷத்திலிருந்து காய்கறி செய்ய முடியாது. நிழல்ல வர்ற வெள்ளாமை ஏதாவதுதான் செய்யணும். 6 வருஷத்துக்கு மேல இந்த மரங்க மூலமா பல லட்சம் வருமானம் வரும்னு சொல்றாங்க. இப்ப இருக்கற சூழ்நிலையில வெள்ளாமை செய்றதை விட மரம் வளக்குறதுதான் நல்லது" என்றார் திட்டவட்டமாக.

இனி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்... நிலத்தைத் தரிசாகப் போடுவதா... விற்று விடுவதா... அல்லது?,

படங்கள் : வீ. சிவக்குமார்

என்ன செய்ய வேண்டும்?

"இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் நிலம் பற்றிய விவரம், பட்டா, சிட்டா, அடங்கல், 2 மார்பளவு புகைப்படங்கள்... ஆகியவற்றுடன் அந்தந்த மாவத்திலுள்ள வன விரிவாக்க மையங்களை அணுகலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மரக்கன்றுகளை நடவு செய்ய இது சரியான பருவம். தவிர, அனைத்து மையங்களிலும் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த மையங்களில் தரமான நாற்றுகள் மானிய விலையில் விற்பனையும் செய்யப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் மரம் வளர்ப்பு தொடர்பான இலவசப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்கிறார் ராஜசேகரன்.

ஐந்தடி வரைதான் கவாத்து...

மரங்களுக்கு கவாத்து அவசியம். ஆனால், பலரும் கிளைகளை நன்கு வளர விட்டு வெட்டும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். இது தவறாகும். எந்த மரமாக இருந்தாலும் மரம் 5 அடி உயரத்துக்கு வளருகிற வரைக்கும் வேண்டுமானால், பக்கக் கிளைகள் வளர்ந்ததும் வெட்டலாம். அதற்கு மேல் மரம் வளர்ந்த பிறகு நுனியில் பக்கக் கிளை பிரியும் போதே கிள்ளி எடுத்து விடவேண்டும். வளர்ந்த பிறகு நீக்குவதால் மரத்தில் காயங்கள், தழும்புகள் ஏற்படும். அதே போல மரத்தில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் இலைகளை நீக்கவே கூடாது. தேவையில்லாத இலைகளை மரங்களே உதிர்த்து விடும்.

குறைந்த செலவில் பசுமைக் கூடாரம்...

வன விரிவாக்க மையங்களில் குறைந்த செலவில் பசுமைக் கூடாரம் அமைக்கும் முறையையும் கற்றுத் தருகிறார்கள். இந்தகூடாரத்துக்கு 15,000 ரூபாய்தான் செலவாகிறது. இதில் 1,000 நாற்றுகள் உற்பத்தி செய்ய முடியும். விவசாயிகள் குறைந்த அளவில் நாற்று உற்பத்தி செய்து கொள்வதற்கு இந்த கூடாரம் உதவியாக இருக்கும்.


தொடர்புக்கு,

வனவிரிவாக்க அலுவலர், ராஜசேகரன், அலைபேசி: 94424-05981.
விவசாயிகள்:

சுப்புராம், அலைபேசி: 99445-92378.
சுப்பாராஜ், அலைபேசி: 98653-24930,
முருகானந்தம், அலைபேசி: 98944-54774

Saturday, August 28, 2010

அன்னை தெரசா


ந.வினோத்குமார்

அன்னை தெரசா... அன்புக்காக ஏங்கியவர்களை அரவணைத்துக்கொண்டவர்.

பிரார்த்தித்த உதடுகளைவிட பணிவிடை செய்யும் விரல்களுக்குச் சொந்தக்காரர். தொழுநோயாளியையும் தெய்வமாகத் தொழுதவர். பிச்சையாக எச்சிலையும் ஏந்தியவர்.

ஆகஸ்ட் 26, 1910 பிறப்பு. செப்டம்பர் 5, 1997 இறப்பு. இடைப்பட்ட காலங்கள் முழுக்க மானுட சேவை மட்டுமே வாழ்க்கைப் பிடிப்பு!

பிறந்த தேதி ஆகஸ்ட் 26 எனினும், அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்ட ஆகஸ்ட் 27-ம் தேதியைத்தான் தன்னுடைய உண்மையான பிறந்த நாள் என்பார்!

இயற்பெயர், ஆக்னஸ் கோன்ஸா பொஜாக்சு. அப்பா, நிகோலோ பொஜாக்சு. அம்மா, ட்ரானாஃபைல் பெர்னாய். அக்கா, அண்ணன் என்று அன்னை தெரசாவுடன் பிறந்த வர்கள் இருவர். வீட்டில் இவரை ஆக்னஸ் என்றே அழைப்பார்கள். ஆக்னஸ் என்றால், அல்பேனிய மொழியில் 'ரோஜாவின் அரும்பு' என்று அர்த்தம்!

தன் 18-வது வயதில் 'லோரெட்டோ சகோதரி'களின் மிஷனரியில் சேர்ந்தார். அதற்குப் பிறகு, தன் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் அவரின் தாய் மற்றும் சகோதரியைப் பார்க்கவே இல்லை!

இந்தியாவுக்கு வருகை தந்தது 1929-ல். கன்னியாஸ்திரீயாகப் பயிற்சி பெற்றது டார்ஜிலிங்கில். மே 24, 1931 அன்று கன்னியாஸ்திரீ ஆனார். அருட்கன்னியாகப் பலருக்குச் சேவை செய்து, தன் 24 வயதில் காச நோயால் இறந்து, பிரான்ஸ் தேசத்தையே துயரத்தில் ஆழ்த்திய தெரசாமார்ட்டினின் நினைவாகவைத்துக் கொண்ட பெயர்தான் 'தெரசா.'

பிறப்பில் அல்பேனியர். குடியுரிமையில் இந்தியர். நம்பிக்கையில் கத்தோலிக்கர். சேவையில் உலகத்துக்குப் பொதுவானவர். அன்பில், இயேசுவுக்கு உரித்தானவர். இப்படித்தான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்!

டிசம்பர் 9, 1948 அன்று கொல்கத்தா வந்தார். 'உள்ளிருந்து வந்த ஓர் அழைப்பு' என்று கொல்கத்தாவுக்கு வந்ததைப்பற்றிக் குறிப்பிடுவார்!

நோயின் பிடியில் இறந்துகொண்டு இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு 'காளிகட் இல்லம்' என்பதை ஆரம்பித்தார். பின்னாளில் 'நிர்மல் ஹிருதய்' என்று பெயர் மாற்றினார். 'அன்னை இல்லம்' என்றுதான் அங்கு உள்ள நோயாளிகள் குறிப்பிடுகிறார்கள்!

தொழுநோயாளிகளுக்காக இவர் ஆரம்பித்தது 'சாந்தி நகர்' நல வாழ்வு மையம். ஆதரவற்ற சிறார்களுக்காக, 'நிர்மலா சிசு பவன்' என்ற இல்லத்தை ஆரம்பித்தார் அன்னை!

ஆசிரியை, செவிலித் தாய்... இவை இரண்டும் அன்னைக்கு மிகப் பிடித்தமான பணிகள். இறுதி வரைக்கும் இந்த இரண்டு பணிகளையும் கைவிடவில்லை!

அக்டோபர் 7, 1950-ல் அன்னை தெரசா தொடங் கிய 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி'க்கு அனுமதி அளித்தது வாட்டிகன். தற்போது 5,450 பேருடன், 123 நாடு களில், 610 மிஷனரிகள் இயங்கி வருகின்றன!

1992-ல் நவின் சாவ்லா எழுதிய அன்னை தெரசா பற்றிய புத்தகம்தான் இன்று வரை அதிகாரபூர்வ வாழ்க்கைச் சரித்திரமாக இருக்கிறது. 14 இந்திய மொழி களில் இது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது!

பத்மஸ்ரீ, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா, ராமன் மகசேசே, கென்னடி சர்வதேச விருது, யுனெஸ்கோ அமைதி விருது, 23-ம் போப் ஜான் அமைதி விருது, டெர்ரிஸ் பாசேம் விருது, பால்சன் பரிசு, ஆல்பர்ட் சுவிட்சர் சர்வதேசப் பரிசு... இவற்றுடன் கிழக்கிலும் மேற்கிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த கௌரவ டாக்டர் பட்டங்கள்... எல்லாவற்றுக்கும் மேலாக நோபல் பரிசு. இவை அன்னை பெற்ற 50-க்கும் மேலான விருதுகளில் முக்கியமான சில விருதுகள்!

அன்னையின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 2010-ல் அன்னையின் பெயரால் 'மதர் எக்ஸ்பிரஸ்' என்று புதிய ரயிலை அறிமுகப்படுத்தப்போகிறது, நமது ரயில்வே துறை அமைச்சகம்!

27 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரைப்பற்றி ஆங்கில மொழியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன!

1964-ல் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்த போப்பாண்டவருக்கு அன்றைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் விலை உயர்ந்த கான்டினென்டல் காரைப் பரிசாக அனுப்பிவைத்தார். அதை அன்னை தெரசாவுக்குப் பரிசாக வழங்கினார் போப். அந்தக் காரை ஏலத்தில்விட்டு, அதில் வந்த தொகை முழுவதையும் அறக்கட்டளைக்கான கணக்கில் சேர்த்தார் அன்னை!

1948-ல் இருந்து நீலக் கறையிடப்பட்ட சாதாரண வெண் புடவைதான் இவர் உடுத்திய உடை. இறுதி வரைக்கும் வேறு உடைகளை உடுத்தியதே இல்லை!

'சேவை என்ற பெயரில் மதமாற்றம் செய்தார்' என்பது இவர் மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு. இது இந்தியாவில். 'கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணி' என்று சொன்னவர் என இவர் மீது வைக்கப்படுகிறது விமர்சனம். இது உலக நாடுகளில்!

நோபல் பரிசு பெறுபவர்களுக்காகக் கொடுக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அன்னை, அதற்கு செலவழிக்கப்படும் தொகையான 1,92,000 டாலர்களை இந்தியாவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்!

'சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்' என்ற படம் இவரின் புகழை உயர்த்தியது. 'மதர் தெரஸா. டைம் ஃபார் சேஞ்ச்' இவர் புகழை அசைத்துப் பார்த்த படம்!

தன்னைச் சார்ந்தோருக்கும், தன் அறக்கட்டளை களில் இருப்போருக்கும், கிறிஸ்துவ மத குருமார்களுக்கும், இன்ன பிற நண்பர்களுக்கும், 66 ஆண்டுகாலமாகத் தான் எழுதிய கடிதங்களை அழித்துவிடச் சொன்னார். அதற்கு இவர் சொன்ன காரணம், 'மக்கள் இந்தக் கடிதங்களை அறிய வரும் பட்சத்தில், இயேசுவைவிட என்னை மேலாக எண்ணிக்கொள்வார்கள்.' இவர் மறைவுக்குப் பிறகு, இவர் எழுதிய கடிதங்கள் தொகுக் கப்பட்டு 'மதர் தெரசா - கம் பி மை லைட்' என்ற பெயரில் வெளிவந்தது!

அக்டோபர் 19, 2003-ல் இவருக்கு 'ஆசீர்வதிக்கப்பட்டவர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் 'புனிதர்' பட்டம் பெற இரண்டாவது அற்புதம் ஒன்று நிகழ்த்தப் பெற வேண்டும்!

'ஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் கடவுளைக் காண்கிறேன்; ஒரு தொழுநோயாளியைத் தொடும்போது இறைவனையே தொடுவதுபோல் உணர்கிறேன்' என்பது இவரின் புகழ் பெற்ற வாசகம்!

சகோதரி சுபாஷினி என்பவர் அன்னையின் முதல் சிஷ்யை. அன்னைக்குப் பின் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்ள அன்னையால் தேர்ந் தெடுக்கப்பட்டவர் சகோதரி நிர்மலா!

ஒரு கூட்டத்தில், 'அன்னை தெரசாவுக்குப் பின் என்ன?' என்று ஒரு பெண்மணி கேட்க, அதற்கு அவர் தந்த பதில், 'தெரசாவுக்குப் பின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி!'