Friday, August 13, 2010

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்!

சிந்திக்க... சிகரம் தொட... ஆளுமை அனாலிசிஸ்
ந.வினோத்குமார்,படம்: ஜெ.தன்யராஜூ

" 'நீங்க நல்லவரா, கெட்டவரா?' என்பது ஹிட் அடித்த சினிமா வசனம். ஆனால்,

நம்புவீர்களா... இந்த உலகில் நல்லவர், கெட்டவர் என்று யாரும் கிடையாது. நீங்கள் சிறந்தவரா... இல்லையா... என்பது மட்டும்தான் கேள்வி!" என்று ஆச்சர்யப்படுத்துகிறார் டாக்டர் ராஜ்மோகன்.

கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் பயிற்சிகளும், ஆளுமை மதிப்பீடுகளும் அளித்துவரும் போதி என்ற நிறுவனத்தின் தலைவர் இவர். இளைஞர்களின் எதிர்கால நலனுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு.

"சிறந்தவர்களாக இருப்பவர்களுக்கு நல்லவர்களுக்கான குணாதிசயம் இருக்கும். அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைகள்தான் ஒருவரை நல்லவராகவும் கெட்டவராகவும் சித்திரிக்கின்றன. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் புரியும் எதிர்வினையை வைத்துதான் ஒருவர் சிறந்தவரா, இல்லையா என்பதைக் கணிக்க முடியும். சிறந்தவர் என்றால், அவர் எந்த அளவுக்குச் சிறந்தவர். சிறந்தவர் இல்லையென்றால், எந்த அளவுக்குச் சிறந்தவர் இல்லை... இதுதான் விஷயம்!" என்கிறார் ராஜ்மோகன்.

மேலும் தொடர்பவர், "நீங்கள் ஒரு புது உடை அணிந்து செல்கிறீர்கள். உங்கள் நண்பர் ஒருவருக்கு அந்த உடை பிடிக்க வில்லை என்றால், உடனே அதை முகத்துக்கு நேராகச் சொல்லலாம். அதை வைத்து அவரைக் கெட்டவர் என்று எப்படி மதிப்பிடுவீர்கள்? இன்னொரு நண்பர் உங்கள் உடையைப் பார்த்துப் புகழ்ந்து தள்ளு கிறார். உடனே, அவரை நல்லவர் என்று முத்திரை குத்திவிட முடியுமா? ஒருவர் அதிகமாகப் பொய் சொல்லலாம். அது தப்பு செய்வதற்காக என்பதைவிடவும், அதில் இருந்து தப்பிப்பதற்கு அல்லது தப்பவைப்பதற்குத்தான் பொய் சொல்கிறார்கள். அவர்களை எந்தப் பிரிவில் அடக்குவீர்கள்? ஆக, பொய் பேசுபவரோ, உங்களின் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகப் பூசி மழுப்புபவராகவோ, இப்படி என்னவிதமான ஆளுமையாகவும் இருக்கலாம். சூழ்நிலைகளை வைத்து ஒருவரை மதிப்பீடு செய்வதைவிடவும் 'அவர் எந்த அளவு சிறந்தவராக இருக் கிறார்' என்பதுபற்றித்தான் நாம் கவலைகொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்களை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது நமது வளர்ச்சிக்கு உதவாது. நாம் நம்மை எப்படி மதிப்பிடுகிறோம். நம்மைச் சரியாக மதிப்பிடத் தெரிந்தால் மட்டுமே நாம் எந்த நிலையில் இருக்கிறோம், இன்னும் நம்மை எப்படி வளர்த்துக்கொள்வது என்று எண்ணிப் பார்க்க முடியும்!" என்பவர், நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ள ஒரு பட்டியலையும் நீட்டுகிறார். சில நிமிடங்கள் மட்டும் செலவழித்து இதை நிரப்புங்கள். உங்கள் ஆழ்மன குணநலன்களை அறிந்துகொள்ளுங்கள்!

கீழே இருக்கும் கட்டத்தை இப்போது நிரப்புங்கள்!

No comments:

Post a Comment