Friday, April 23, 2010

இப்படிக்கு காதலி!

உயிரின் வலியை விட
உன் பிரிவின் வலி கொடுமையாக
தெரிகிறது எனக்கு!

படித்துறையில் அமர்ந்து நாம்
பேசிய நாட்களில் நீ போட்ட
கற்களை தேடத் தோன்றுகிறது
இப்பொழுதெல்லாம்!

ஒரு நிலாபொழுதில் என்
அம்மாவுக்குத் தெரியாமல்
கொண்டு வந்த புட்டுவை
உனக்கு கொடுக்கையில்
"உனக்காக எதுவும் செய்வேன் என்றாயே
உயிரை தருவாயா," எனக் கேட்டேன்
"மாட்டேன் - உன்னை
நேசிக்கவாவது நான்
சுவாசிக்க வேண்டுமே," என்றாய்!

நீர் கொண்டு செல்கையில்
குறுகிய பாலத்தில் நடக்கையில்
விழுந்துவிடுவேனோ என
பார்த்து பார்த்து நீ
அக்கறை பட்ட நாட்களை
நினைத்து ஏங்குகிறேன்!

என் பெற்றோர் உன்னை
ஏசியபோது மௌனமாகவே
நின்று கொண்டிருந்தாய்!

பின்னொருநாள்
என் கையை இறுகப்பற்றி
திரும்பி வருவேன் என்ற
வார்த்தை மட்டும் கூறி
விடை பெற்று சென்றாய்!

நீ வாங்கி தந்த கொலுசில்
ஒன்று விழுந்தவுடன் - நீயே
தொலைந்தது போல் ஒரு
உதறல் - இன்னமும் தேடிக்கொண்டே
இருக்கிறேன் தொலைந்த ஒற்றை
கொலுசை - உனக்காக
காத்துக் கொண்டிருப்பது போல்!

ஹெமி கிருஷ்

No comments:

Post a Comment